கலைகளில் கரையும் எல்லாத் தருணங்களிலும்
கிட்டுவதில்லை கலையின் உச்சம் ;
என்னுள் நான்கெட நானறியே னத்தருணம்
விளைகிறது கலையின் உச்சம்.
முன்னது நிகழ்த்து கலை.
பின்னது நிகழ்கலை.
****
இன்னா தம்ம இவ் வுலகம்;
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
Showing posts with label சங்கப் பாடல் போல... Show all posts
Showing posts with label சங்கப் பாடல் போல... Show all posts
Tuesday, 2 November 2010
சுழி
![]() |
| Milky way Galaxy |
உண்டாகி கருவாகி உறுவாகி தருவாகி
திருவாகி குருவாகி மருவாகி பருவாகி
பல் விழுந்து பாடை சேர்ந்து
மண்ணூர்ந்து புல்வளர்ந்து - மாவிருந்து
மடிசுரந்து காம்பூர்ந்து
ஊர்ந்து ஊர்ந்து
தொடர்ந்திருந்து
இருந்து இருந்து
இருத்தலில்
இருத்தலாய்
விளைகிறதே..
****
Saturday, 11 September 2010
Wednesday, 8 September 2010
Wednesday, 1 September 2010
Monday, 30 August 2010
Sunday, 29 August 2010
வளர் - சிதை மாற்றம்
எனக்கு மெனக்குமான தொடர் போராட்டத்தில்
கரைந்து மறையு மென் வாழ்வு ;
யான் வளர யான் தேய்கிறே
னென்செய் யென் பராபரனே ?
கரைந்து மறையு மென் வாழ்வு ;
யான் வளர யான் தேய்கிறே
னென்செய் யென் பராபரனே ?
விழிப்பில் கெடு முழுமை
நிகழுங்கன் அறிவதில்லை சிரிப்பதூஉம் அழுவதூஉம்
மழலைகளாய் வாழ்ந்த போழ்து - யான்வளர
நிகழுங்கன் அறிகிறேன் அனைத் துணர்வும்
அத்தருணம் கெடுகிறது முழுமை.
மழலைகளாய் வாழ்ந்த போழ்து - யான்வளர
நிகழுங்கன் அறிகிறேன் அனைத் துணர்வும்
அத்தருணம் கெடுகிறது முழுமை.
எண்ணக்குவியல்
எண்ணமற்ற கணங்களில் உறைந்திருந்த தருணம்
வந்நகம் கொண்டு வருடும் வளர்ப்புபூனை ;
கல்லிட்ட மையம் தனை நோக்கி
குவியும் என்னைத் திவழைகள் .
வந்நகம் கொண்டு வருடும் வளர்ப்புபூனை ;
கல்லிட்ட மையம் தனை நோக்கி
குவியும் என்னைத் திவழைகள் .
Tuesday, 24 August 2010
நானென் முனைப்பு நெஞ்சு
அடிமுதல் முடிவரை
அணுவணுவாய் வாய்கொண்டு
விழித்திருந்து
விரைந்தெழுத விரைத்தொழுகிய
நென் நகந்தை .
விடியுங்கால் கால் இடை
தளர்ந்த நடை;
அகம் கண்டது விடை.
அணுவணுவாய் வாய்கொண்டு
விழித்திருந்து
விரைந்தெழுத விரைத்தொழுகிய
நென் நகந்தை .
விடியுங்கால் கால் இடை
தளர்ந்த நடை;
அகம் கண்டது விடை.
தரிசனம்
நானழிந்த தொரு தருணம்
மின்னி மறைந்த திறை ;
சிந்தையுள் தாண்டவப் பறை
கிட்டுமோ மீண்டுமொரு முறை ;
காத்திருந்தேன் கடைசி வரை
காணவில்லை - நான்
உள்ளவரை.
மின்னி மறைந்த திறை ;
சிந்தையுள் தாண்டவப் பறை
கிட்டுமோ மீண்டுமொரு முறை ;
காத்திருந்தேன் கடைசி வரை
காணவில்லை - நான்
உள்ளவரை.
நாணம்
நாண மிழந்த நங்கையர் காண்
காட்சி யாவும் காணலே.
பாட்டி சொல் கேளீர் :
கடைசி வரைக்கும் எதுவுமே
கெடைக்காதுடி கண்டாரவோளி . .!
****
காட்சி யாவும் காணலே.
பாட்டி சொல் கேளீர் :
கடைசி வரைக்கும் எதுவுமே
கெடைக்காதுடி கண்டாரவோளி . .!
****
Wednesday, 27 January 2010
முடிவு
முடிவின்மையே ஓயாத பயணத்தின் முடிவெனில்
நான் செய்யவென வேதேனு முன்டோவெனும்
புதிரின் பிடியில் உரையும் நான்..!
Subscribe to:
Posts (Atom)
